துவரங்குறிச்சி பகுதியில் வயது முதிர்வு காரணமாக ஆண் காட்டெருமை உயிரிழப்பு...
துவரங்குறிச்சி
திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி வனத்துறை அலுவலகம் அருகில் மலையில் இருந்து உணவு மற்றும் குடிநீர் தேவைக்காக நிலப்பரப்பிற்கு கூட்டம் கூட்டமாக காட்டெருமைகள் விவசாய நிலங்களில் விளைந்த பயிர்களை உண்பதற்காக காட்டு எருமைகள் கூட்டம் கூட்டமாக வருவது வழக்கம். இந்த நிலையில் சுமார் 8 வயது ஆண் காட்டெருமை ஒன்று வயது முதிர்வு காரணமாக உயிரிழந்துள்ளது. இச்சம்பவம் பற்றி தகவல் அறிந்த வனத்துறையினர் காட்டெருமையின் உடலை மீட்டு கால்நடை மருத்துவர் கொண்டு உடற்கூறு ஆய்வு செய்து பின் வனத்துறை அலுவலகம் அருகிலேயே பள்ளம் தோண்டி புதைத்தனர்
What's Your Reaction?
Like
2
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0