மதுரை:
லதா ரஜினிகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு தல்லாகுளம் பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை செய்து பக்தர்களுக்கு இனிப்புகள் வழங்கிய ரஜினி ரசிகர்கள் - சூப்பர் ஸ்டார்1996 ல் குரல் கொடுத்தது போல 2026 இல் அரசியலுக்கு வந்தால் நிச்சயமாக உழைக்கத் தயார் மதுரையில் ரஜினி ரசிகர் மன்றத்தினர் பேட்டி
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் துணைவியார் லதா ரஜினிகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு மதுரையைச் சேர்ந்த ரஜினி ரசிகர் மன்றத்தினர் மதுரை தல்லாகுளம் பகுதியில் இருக்கக்கூடிய இரட்டை விநாயகர் ஆலயத்தில் சிறப்பு பூஜை செய்த பிறகு ரஜினிகாந்த் தம்பதியினருடன் நீடூடி வாழ தேங்காய் உடைத்த பிறகு,108 திவ்ய தேசங்களில் ஒன்றாக இருக்கக்கூடிய அருள்மிகு பிரசன்ன வெங்கடாஜலபதி ஆலயத்தில் வெற்றிலை மாலை துளசி மாலை உள்ளிட்டவைகளை பெருமாளுக்கு சாற்றி சிறப்பு பூஜைகள் செய்த பிறகு கோவில் அருகே பக்தர்களுக்கு இனிப்புகள் வழங்கி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் துணைவியார் நீடூடி வாழ வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பியதை தொடர்ந்து அங்கே வந்த பக்தர்களுக்கு இனிப்புகள் வழங்கி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகள் பேசும்போது
திரையுலகில் சூப்பர் ஸ்டார் ஆக விளங்கும் ரஜினிகாந்த் உடைய துணைவியார் அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு அவர் நீடூடி வாழ வேண்டும் என்ற எண்ணத்தில் மதுரையில் கள்ளழகர் எழுந்தருளும் பிரசன்ன வெங்கடாஜலபதி ஆலயத்தில் சிறப்பு பூஜைகள் செய்திருக்கின்றோம்.
வரும் மாதத்தில் மூன்று தலைமுறைகளைக் கண்ட ரஜினி ரசிகர்களுடைய குடும்பத்தினரை ஒன்றிணைத்து ஒரு மாபெரும் விழா நடத்த திட்டமிட்டுள்ளோம் இதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடைய மூத்த புதல்வி சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.
ரஜினி ரசிகர் மன்றத்தை சேர்ந்த குடும்பத்தினர் அனைவரும் ஒன்று சேர்ந்து நடத்தக்கூடிய இந்த விழாவில் அவர் சிறப்பு சேர்க்க இருப்பது எங்களுக்கு மேலும் பெருமை 1996 இல் எவ்வாறு குரல் கொடுத்தாரோ அதேபோன்று வரக்கூடிய தேர்தலிலும் அவர் குரல் கொடுப்பாரேயானால் நிச்சயம் நாங்கள் தேர்தலுக்காக பணி செய்ய தயார்.தேர்தல் குறித்தும் அரசியல் கட்சிகள் குறித்தும் தலைவர் ரஜினிகாந்திடம் தான் கேட்க வேண்டும் அவர் என்ன வழி காட்டுகிறாரோ அந்த வழியில் நாங்கள் பயணம் செய்வோம் என்று தெரிவித்தனர்.