புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை வட்டம், தச்சங்குறிச்சியில், ஜல்லிக்கட்டுப் போட்டியினை, சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி , பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர், மாவட்ட ஆட்சித்தலைவர் மு.அருணா, தலைமையில் கொடியசைத்து துவக்கி வைத்தார்கள். உடன், முன்னாள் அரசு வழக்கறிஞர் கே.கே.செல்லப்பாண்டியன் , புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் பா.ஐஸ்வர்யா, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.