தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழகம் சார்பில் கைவினைப்பொருட்கள் கண்காட்சியினை அமைச்சர் தா.மோ. அன்பரசன் திறந்து வைத்தார்...
தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழகம் சார்பில் கைவினைப்பொருட்கள் கண்காட்சியினை அமைச்சர் தா.மோ. அன்பரசன் திறந்து வைத்தார்...

சென்னை: கிண்டி, கத்திபாரா பாலத்தின் கீழ், நகர்ப்புற சதுக்கத்தில் (Urban Square) குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் புதுதில்லி (கைவினைப்பொருட்கள்), அபிவிருத்தி ஆணையர் மற்றும் தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழகம் சார்பில் நடைபெறும் மாநில அளவிலான காந்தி சில்ப் பஜார் கைவினைப்பொருட்கள் மற்றும் கைத்தறி துணிகள் பிரத்தியேக கண்காட்சி மற்றும் விற்பனை கண்காட்சியினை திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த் துறை அரசு செயலாளர் ஏ. அமுதவள்ளி, தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சி கழகத்தின் நிர்வாக இயக்குநர் எஸ்.அமிர்தஜோதி, (கைவினைப்பொருட்கள்) தெற்கு மண்டலம் அபிவிருத்தி ஆணையர் லஷ்மன் ராவ் அத்துகுரி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
What's Your Reaction?






