அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சரும் கழக அமைப்புச் செயலாளருமான செல்லூர் கே.ராஜூ தலைமையில் மதுரை செல்லூர் 60 அடி ரோட்டில்  கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

Dec 31, 2024 - 12:24
Dec 31, 2024 - 12:28
 0  27
அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சரும் கழக அமைப்புச் செயலாளருமான செல்லூர் கே.ராஜூ தலைமையில் மதுரை செல்லூர் 60 அடி ரோட்டில்  கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சரும் கழக அமைப்புச் செயலாளருமான செல்லூர் கே.ராஜூ தலைமையில் மதுரை செல்லூர் 60 அடி ரோட்டில்  கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

மதுரை மாநகர்  மாவட்ட அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் முன்னாள் அமைச்சரும் கழக அமைப்புச் செயலாளருமான செல்லூர் கே.ராஜூ தலைமையில் மதுரை செல்லூர் 60 அடி ரோட்டில்  கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறையினர் அனுமதி மறுத்த நிலையில் தடையை மீறி 1000க்கும் மேற்பட்ட அதிமுகவினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது 100க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்  இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் சரவணன் தலைமையில் 20-க்கும் மேற்ப்பட்ட சரவணா இன்ஸ்டியூட்  கல்லூரியை சேர்ந்த செவிலியர்கள் கையில் யார் அந்த சார்.? Save our daughter. என்ற வாசகத்துடன் பதாகைகளை கையில் ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பினர் 

அண்ணா பல்கலை கழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பாலியல் வன்கொடுமைக்கு ஆளான கல்லூரி மாணவிக்கு நீதி வழங்க வேண்டும் என தமிழக முழுவதும் பாதிப்புக்கு ஆளான மாணவிக்கு ஆதரவாக பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், பல்வேறு அமைப்புகளும் ஆதரவளித்து வருகின்றனர். பாலியல் வன்கொடுமைக்கு ஆளான கல்லூரி மாணவிக்கு ஆதரவாக அதிமுக சார்பிலும், பாஜக சார்பிலும்  பல்வேறு அரசியல் கட்சி சார்பிலும் ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டங்கள் நடத்துவதாக அறிவித்திருந்தனர். இந்த நிலையில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உயிர் இழந்த நிலையில் இந்த போராட்டங்கள் ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் மதுரை மாநகர் மாவட்ட கழகத்தின் சார்பிலும், முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு தலைமையில் மதுரை செல்லூர் 60 அடி சாலையில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தலைமையில்  கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறை சார்பில் அனுமதி வழங்கப்படாத நிலையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும், தடையை மீறி போராட்டத்தில் ஈடுபடுவர்களை கைது செய்வதற்காக  காவல்துறையினர் குவிக்கப்பட்டனர் 
இந்த நிலையில் தடை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் ஆகியோர் உட்பட 200க்கும் மேற்பட்ட அதிமுக நிர்வாகிகள் கைது செய்யப்பட்டு அருகில் இருக்கக்கூடிய தனியார் திருமண மண்டபத்தில் போலீசார் தங்க வைத்தனர்...

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow