தொழிலதிபர் கமலஹாசன் யாதவை தாக்கிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாரத முன்னேற்ற கழக தலைவர் பாரதராஜா யாதவ் வலியுறுத்தல்..!!

தொழிலதிபர் கமலஹாசன் யாதவை தாக்கிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாரத முன்னேற்ற கழக தலைவர் பாரதராஜா யாதவ் வலியுறுத்தல்..!!

Jan 5, 2025 - 19:08
Jan 5, 2025 - 19:30
 0  36
தொழிலதிபர் கமலஹாசன் யாதவை தாக்கிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாரத முன்னேற்ற கழக தலைவர் பாரதராஜா யாதவ் வலியுறுத்தல்..!!
தொழிலதிபர் கமலஹாசன் யாதவை தாக்கிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாரத முன்னேற்ற கழக தலைவர் பாரதராஜா யாதவ் வலியுறுத்தல்..!!
தொழிலதிபர் கமலஹாசன் யாதவை தாக்கிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாரத முன்னேற்ற கழக தலைவர் பாரதராஜா யாதவ் வலியுறுத்தல்..!!

பள்ளிக்கரணை:

தொழிலதிபர் திரு.கமலஹாசன் யாதவை தாக்கிய அனைவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வன்கொடுமை சட்டத்தினை தவறாக பயன்படுத்திட எவர் வந்தாலும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்

 முதல்வர்- டி.ஜி.பி ஆகியோரை பா.மு.க தலைவர் பாரதராஜா யாதவ் வலியுத்தல்.

பாரத முன்னேற்றக் கழக தலைவர் பாரதராஜா யாதவ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

சென்னை பள்ளிக்கரணையில் வீடுகளை கட்டி விற்பனை செய்யும் நிறுவனத்தின் அதிபர் கமலஹாசன்.

இவரை கடந்த 2 நாட்களுக்கு முன்பு 7 பேர் கொண்ட கும்பல் வீடு புகுந்து தாக்கியுள்ள்து.

கமலஹாசன் வீடியோ ஆதாரத்தோடு கொடுத்த புகாரின் பேரில் பள்ளிக்கரணை காவல் நிலையத்தார் 7 பேர் மீதி வழக்கு பதிந்து ஒருவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

சாதாரண பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்திருந்தாலும் தலைமறைவான 6 நபர்களும் தொடர்ந்து கமலஹாசனுக்கு கொலை மிரட்டல் விடுத்து வருகின்றனர்.

அதுமட்டுமின்றி தலைமறைவாக உள்ள 6 பேரும் சேர்ந்து சாதிய அரசியலில் உள்ள சிலரை காவல் நிலைத்துக்கு செல்ல வைத்து தாக்குதலுக்குள்ளான கமலஹாசன் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிய சொல்லி பிரச்சினை செய்கிறார்களாம்.

 வீடியோ ஆதாரத்துடன் புகார் கொடுத்தும் சம்பந்தமே இல்லாமல் சிலர் வன்கொடுமை சட்டத்தினை கையிலெடுத்து மிரட்டி பார்க்கின்றனர்.

அப்படி ஏதேனும் மீண்டும் கமலஹாசனுக்கு எவராயினும் எந்த வழியில் இனி தொல்லை கொடுக்க முன் வந்தால் கமலஹாசனுக்கு ஆயர்குல சமூகம் உடனிருந்து கடுமையான போராட்டத்தில் குதிக்கும்.

காவல்துறையை கையில் வைத்திருக்கும் மாண்புமிகு முதல்வர் ஸ்டாலின்  ,தமிழக காவல்துறை தலைவர் திரு.சங்கர் ஜூவால் கமலஹாசனை தாக்கிய அனைவரும் மீது கடுமையான சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து சிறையிலடைக்கவும்

வன் கொடுமை சட்டத்தினை தவறாக பயன்படுத்திட எவர்  முன் வந்தாலும் அவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம். 

இவ்வாறு தமது செய்திக்குறிப்ப்பில் பாரத முன்னேற்றக் கழக தலைவர் பாரதராஜா யாதவ் கூறியுள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow