பள்ளி, கல்லூரி மாணவ,மாணவிகளின் அறிவியல் கண்காட்சி: மாவட்ட ஆட்சியர் துவக்கி வைப்பு
பள்ளி, கல்லூரி மாணவ,மாணவிகளின் அறிவியல் கண்காட்சி: மாவட்ட ஆட்சியர் துவக்கி வைப்பு

மாணவ,மாணவிகளின் புதிய கண்டுபிடிப்புகளை மாணவர்கள் வியந்து பார்த்து செல்கின்றனர். பின்னர் ஆட்சியர் சுப்பு லெட்சுமி செய்தியாளர்களிடம் கூறுகையில் வேலூர்மாவட்டத்தில் சிறுத்தைகள் நடமாட்டம் கேவிகுப்பம் குடியாத்தம் பகுதிகளில் உள்ளது இதனை கட்டுபடுத்த ஓர் இடத்தில் ஏஐ தொழில்நுட்பம் பயன்படுத்தி சிறுத்தையை விரட்டினோம் சிறுத்தையை விரட்ட வனத்துறையினரும் வருவாய்த்துறையினரும் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர் மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் சிறுத்தைகள் நடமாட்டத்தை கண்டறிந்து அவைகளை விரட்ட நடவடிக்கை எடுக்கிறோம் குறிப்பாக கிராம மக்கள் காட்டை ஒட்டியுள்ள மலை அடிவார மக்கள் காட்டு பகுதிகளில் தங்களுடைய ஆடுமாடுகளை ஓட்டி செல்ல வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளோம்.
தற்போது சிறுத்தைகளை விரட்ட ஏ.ஐ தொழில் நுட்பத்தை பயன்படுத்தி சிறுத்தைகளை விரட்ட தமிழக அரசுக்கு அனுமதி கோரியும் பரிந்துரை கடிதம் அனுப்பியுள்ளோம் அரசின் அனுமதி கிடைத்தவுடன் இந்த ஏ.ஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இம்மாவட்டத்தில் சிறுத்தைகளை விரட்ட நடவடிக்கை எடுப்போம் இம்மாவட்டத்தில் இதுவரையில் 80 கிராமங்களுக்கு காளைவிடும் விழாவுக்கு அனுமதி அளிக்கபடுகிறது அனுமதியில்லாமல் யாரும் நடத்த கூடாது புதியதாக நடத்தவிரும்புபவர்கள் புதியதாக விண்ணப்பங்களை கொடுத்தால் பரிசீலனை செய்து நடத்த தயாராக உள்ளோம் இம்மாவட்டத்தில் பொங்கல் தொகுப்பு 90 சதவிகிதம் வழங்கப்பட்டுவிட்டது ஆனால் இலவச வேட்டி சேலை இதுவரையில் 44 சதவிகிதம் தான் வழங்கப்பட்டுள்ளது இம்மாதம் இறுதிக்குள் அனைவருக்கும் வழங்க நடவடிக்கை எடுப்போம் என்று கூறினார்.
What's Your Reaction?






