மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் தெப்பத்திருவிழாவை முன்னிட்டு முகூர்த்தகால் நடும் விழா

மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் தெப்பத்தில் முகூர்த்தகால் நடும் விழா

Jan 21, 2025 - 15:39
 0  16
மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் தெப்பத்திருவிழாவை முன்னிட்டு முகூர்த்தகால் நடும் விழா

மதுரை:

மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் தெப்பத்திருவிழா தெப்பத்தில் முகூர்த்தகால் நடும் விழா கோலாகலம்.

மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் தெப்பத்திருவிழா நடைபெறும் வண்டியூர் மாரியம்மன் தெப்பத்தில் தெப்பத்திருவிழாவை முன்னிட்டு முகூர்த்தகால் நடும் விழா சிறப்பாக நடைபெற்றது. பக்தர்கள் ஏராளமானோர் விழாவில் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் நிர்வாகத்தின் கீழ் உள்ள வண்டியூர் மாரியம்மன் கோயில் தெப்பத்தில் ஆண்டுதோறும் ஜனவரி தைப்பூச பவுர்ணமியன்று அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் தெப்பத்திருவிழா கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். விழவையொட்டி தெப்பத்தில் அலங்காரிக்கப்பட்ட தேரில் சுந்தரேஸ்வரரும், மீனாட்சி அம்மனும் எழுந்தருளி பகல் இரவு என மூன்று முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் இந்த நிகழ்வில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பல்லாயிரகணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்வர்.

அந்த வகையில் சிறப்பு பெற்ற தெப்பத்திருவிழாவிற்காக வரும் 31ம் தேதி கொடியேற்றமும், வரும் பிப்ரவரி 11ம் தேதி தெப்பதிருவிழாவும் நடைபெறவுள்ள நிலையில் தெப்பதிருவிழா முதல் நிகழ்வாக முகூர்த்தகால் நடும் விழா நடைபெற்றது.
முன்னதாக தெப்பம் அருகில் உள்ள அருள்மிகு முக்தீஸ்வரர் திருக்கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட முகூர்த்தகால் வாத்தியங்களுடன் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு தெப்பத்தில் நடப்பட்டது.

விழாவில் கோயில் இணை ஆணையாளர் கிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் கோயில் பணியாளர்கள்.பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்து முகூர்த்தகால் நடும் விழாவில் பங்கேற்றனர். 31ம் தேதி கொடியேற்றுதுடன் தெப்பதிருவிழா துவங்கும் நிலையில் தினமும் மீனாட்சி சுந்தரேஸ்வரர் சிம்மம். கற்பக விருட்சம், காமதேனு, கைலாசபர்வத வாகனம் என பல்வேறு வாகனங்களில் எழுந்திருளி வீதி உலா வரும் நிகழ்வும் நடைபெறுகிறது.

தெப்பதிருவிழா நிகழ்வில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பல்லாயிரகணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்வர் என்பதால் விழா ஏற்பாடுகள் கோயில் அறங்காவலர்கள் மற்றும் இணை ஆணையர் மேற்பார்வையில் சிறப்பாக செய்யப்பட்டு வருகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow