மூளையில் பாதிக்கப்பட்ட பகுதிகளை அகற்றி, வலிப்பு நோயிலிருந்து நிரந்தரமாக மீட்டெடுத்த மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை...

மூளையில் பாதிக்கப்பட்ட பகுதிகளை அகற்றி, வலிப்பு நோயிலிருந்து நிரந்தரமாக மீட்டெடுத்த மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை...

Jan 29, 2025 - 10:57
 0  33
மூளையில் பாதிக்கப்பட்ட பகுதிகளை அகற்றி, வலிப்பு நோயிலிருந்து நிரந்தரமாக மீட்டெடுத்த மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை...
மதுரை:
30 வயது இளைஞருக்கு மூளையில் பாதிக்கப்பட்ட பகுதிகளை அகற்றி, வலிப்பு நோயிலிருந்து நிரந்தரமாக மீட்டெடுத்த மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை
வீடியோ EEG உட்பட நவீன சாதனங்களின் தொகுப்பு, நோயாளியின் மூளையில் வலிப்பு நோயின் அமைவிடத்தை துல்லியமாக கண்டறிய உதவியிருக்கிறது. அச்சம், மகிழ்ச்சி முதலியவைகளை உணர்த்தும் அமிக்டாலா, டெம்போரல் லோப்கள் மற்றும் ஹிப்போகாம்பஸ் போன்ற நோயாளியின் பாதிக்கப்பட்ட மூளைப் பகுதிகளை இந்த அறுவை சிகிச்சை அகற்றியதால் இனிமேல் வலிப்பு நோய்க்கான இடர்வாய்ப்பை திறம்பட நீக்கியிருக்கிறது. பல ஆண்டுகளாக கை, கால் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டு மருந்துகளின் மூலம் சிகிச்சை எடுத்தும் குணமடையாத 30 வயதான ஒரு இளைஞருக்கு மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் செய்யப்பட்ட ஒரு மேம்பட்ட அறுவை சிகிச்சை செயல்முறையினால் நிரந்தர நிவாரணம் கிடைத்திருக்கிறது. ‘டெம்பரல் லோபெக்டாமி வித் அமிக்டாலா- ஹிப்போகாம்பெக்டோமி' என அழைக்கப்படும் இச்செயல்முறை, அவரது வலிப்புத்தாக்கங்களுக்கு காரணமான மூளைத் திசுக்களை வெற்றிகரமாக அகற்றியிருக்கிறது. தென் தமிழ்நாட்டில் இத்தகைய சிகிச்சை மேற்கொள்ளப்படுவது மிக அரிதானது என்பது குறிப்பிடத்தக்கது. 

இதற்கு முன்புவரை ஒவ்வொரு வாரமும் பலமுறை வலிப்பு பாதிப்புகளை எதிர்கொண்ட இந்நோயாளி, இந்நோயாளிக்கு மூன்று மாதங்களுக்கு முன்பு இம்மருத்துவமனையில் இந்த அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அதற்கு பிறகு இவர் இப்போது இயல்பான, சுறுசுறுப்பான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். ஒரு ஆண்டு வரை, வலிப்பு நோய்க்கு எதிரான மருந்துகளை எடுத்துக்கொள்வது தேவைப்படும். ஆனால் அதற்கு பிறகு எந்த மருந்தும் இவருக்கு தேவைப்படாது. 
அச்சம், மகிழ்ச்சி முதலியவைகளை உணர்த்தும் அமிக்டாலா, டெம்போரல் லோப்கள் மற்றும் ஹிப்போகாம்பஸ் ஆகியவற்றை அகற்றுவதற்கான மூன்று மணிநேர அறுவைசிகிச்சையானது, இம்மருத்துவமனையின் நரம்பியல் துறை தலைவர் டாக்டர். விஜய் ஆனந்த், இத்துறையின் முதுநிலை நிபுணர். டாக்டர் நரேந்திரன், நரம்பியல் அறுவைசிகிச்சை துறையின் தலைவர் மற்றும் முதுநிலை நிபுணர். டாக்டர் செல்வமுத்துக்குமரன் மற்றும் இத்துறையின் முதுநிலை நிபுணர். டாக்டர் K. செந்தில் குமார், ஆகியோரை உள்ளடக்கிய திறன்மிக்க மூளை அறுவை சிகிச்சை குழுவினரால் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. 
மூளை நரம்பியல் துறையின் முதுநிலை நிபுணர் டாக்டர். நரேந்திரன் செய்தியாளர்களிடம் பேசும்போது, “ஒரு வாரத்தில் பலதடவை ஏற்படுகிற வலிப்புத் தாக்கங்களின் காரணமாக இந்நோயாளியின் வாழ்க்கைத்தரம் மிக கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தது. திடீர் திடீரென ஏற்படும் இந்த வலிப்பு நேர்வுகளினால் அவரது சுற்றுப்புறம் குறித்த அவரது விழிப்புணர்வை அவர் இழந்து விடுவார். இதன் காரணமாக பல விபத்துகள் அவருக்கு ஏற்பட்டு உயிருக்கு அதிக ஆபத்தை விளைவிக்கக் கூடியதாக இருந்திருக்கின்றன” என்று விளக்கமளித்தார். அவர் மேலும் பேசுகையில், “இதற்கான மருந்துகளை எடுத்துக்கொண்ட போதிலும் பலனின்றி வலிப்புத்தாக்கங்கள் தொடர்ந்து இருந்து வந்திருக்கின்றன. எனவே வலிப்புத்தாக்கத்தின் அமைவிடத்தை துல்லியமாக அடையாளம் காண்பதற்காக 3D MRI, PET CT மற்றும் வீடியோ EEG உட்பட மிக நவீன நோயறிதல் தொழில்நுட்பங்களையும், சாதனங்களையும் நாங்கள் பயன்படுத்தினோம். அதைத்தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பகுதிகளான அமிக்டாலா, டெம்போரல் லோப்கள் மற்றும் ஹிப்போகாம்பஸ் ஆகியவற்றை அகற்றுவதற்காக ஒரு திறந்தநிலை மூளை அறுவைசிகிச்சையை நாங்கள் மேற்கொண்டோம். மூளையின் பிற கட்டமைப்புகளை பாதிக்காமல் இதை வெற்றிகரமாக நாங்கள் செய்து முடித்தோம். அதைத்தொடர்ந்து இந்நோயாளி விரைவாக குணமடைந்து மீண்டிருக்கிறார்; அதற்கு பிறகு வலிப்புத்தாக்கம் ஏற்படாத வாழ்க்கையை அவர் வாழ்ந்து வருகிறார். இன்னும் ஓராண்டிற்கு வலிப்புத்தாக்கம் வராமல் தடுப்பதற்கான மருந்தை அவர் எடுத்துக்கொள்வது அவசியமாக இருந்தாலும், அதற்கு பிறகு மருந்தை எடுத்துக்கொள்வதை முற்றிலுமாக நிறுத்தி விடுவதற்கு ஒரு வலுவான சாத்தியம் இருக்கிறது” என்று கூறினார்.

அமிக்டாலா, டெம்போரல் லோப்கள் மற்றும் ஹிப்போகாம்பஸ்  ஆகியவற்றை நீக்குகிற அறுவைசிகிச்சை, பகுதியளவு வலிப்பு இருக்கிற நோயாளிகளுக்கு ஒரு வரப்பிரசாதமாக இருப்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இப்பாதிப்புள்ள நோயாளிகளுக்கு மூளையின் ஒரு குறிப்பிட்ட பகுதியிலிருந்து வலிப்புத்தாக்கங்கள் உருவாகும், இவை மருந்துகளுக்கு பலனளிப்பதில்லை. வீடியோ EEG போன்ற தொழில்நுட்பங்கள் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை துல்லியமாக அடையாளம் காட்டுவதற்கு மருத்துவர்களுக்கு உதவுகின்றன. மூளை திசுவிற்குள் வெட்டுக்கீறல்கள் செய்வது இந்த மேம்பட்ட அறுவைசிகிச்சையில் தேவை இருக்காது; அதற்கு பதிலாக மூளையில் ஏற்கனவே இருக்கிற இடைவெளிகள் வழியாக பாதிக்கப்பட்ட பகுதிகளை அணுகும் மருத்துவர்கள், சேதமடைந்த திசுவை துல்லியமாக அகற்றுவார்கள். பாதிக்கப்பட்ட பகுதிகள் அகற்றப்படும் மருந்துகள் தேவைப்படாது. இந்த அறுவைசிகிச்சைக்கு பிறகு, எஞ்சிய நாயாளிகள், மருந்துகளின் உதவியோடு இயல்பான மற்றும் துடிப்பான வாழ்க்கையை மகிழ்ச்சியோடு வாழ முடியும். 
இந்த செய்தியாளர் சந்திப்பு நிகழ்வில் மருத்துவமனையின் திலீப் உடனிருந்தார். மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, மேம்பட்ட மூளை நரம்பு அறிவியல் தொழில்நுட்பம், சாதனங்கள் மற்றும் கை, கால் வலிப்புக்கான அறுவைசிகிச்சையில் சிறப்பு நிபுணத்துவம் கொண்ட மருத்துவர்கள் குழு ஆகியவற்றை கொண்டு திறம்பட இயங்கி வரும் ஒரு சில மருத்துவமனைகளுள் ஒன்றாகும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow